Tuesday, April 10, 2007

பாட்டு எப்படி? - சிவாஜி

ஷங்கர் இல்லாமல் ரகுமான் வெல்ல முடியும் என்று வெகு நாட்களுக்கு முன்பே நிரூபித்திருந்தார். அதே போல் ரகுமான் இல்லாமலும் ஷங்கர் வெல்ல முடியும் என்று “அன்னியன்” நிரூபித்து விட்டது. இந்நிலையில் ரஜினி-ஷங்கர்-ரகுமான்-ஏ வி எம் என ஒரு மெகா கூட்டணிப் படம் அதீத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியதில் வியப்பேதும் இல்லை. இதற்கு முன் ரஜினி படங்களுக்கு ரகுமான் இசையமைத்தபோது பாடல்கள் ஹிட் ஆனாலும் ஒரு சிறு குறை இருந்து கொண்டே இருந்த்து. அது இப்போது நிவர்த்தி செய்யப் படுமா என்ற கேள்வி எழுகிறது. மொத்த்தில் யார் படமென்ற கேள்வி இல்லாமல் ஷங்கர் இயக்கும் ரஜினி பட்த்தில் ரகுமான் பாடல்கள் எப்படி என்ற எதிர்பார்ப்புதான் எனக்கு இருந்த்து. அது பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்

1. தீம் இசை
முதலில் கேட்ட்து இதைத்தான். இதை வைத்துப் படம் பப்படம் என்ற முடிவுக்கே வந்திருந்தேன்.
மதிப்பு: 3

2. வாடா வாடா
பாடியவர்:பிளாஸி, நரேஷ் ஐயர், ரக்வீப் ஆலம்.
பாடல்: நா. முத்துக்குமார், பிளாஸி (ஆங்கிலம்)
தீம் இசை பாடாவதியாக இருந்த்தாலோ என்னவோ புதிதாக ஒரு தீம் பாடலைப் போட்டிருக்கிறார் ரகுமான். பாடல் முழுவதும் பஞ்சு (அதாங்க பஞ்ச்) பறக்கிறது. பிளாஸியின் வார்த்தைகளும் நா. முத்துக்குமாரின் வார்த்தைகளும் பஞ்சு பஞ்சாய்ப் பறக்கின்றன! மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல ஒரு மண்ணும் இல்லை!

மதிப்பு: 4

3. சூரியனும் சந்திரனும்

பாடியவர்: பாலசுப்பிரமணியம், ரெஹானா, பென்னி.
பாடல்: நா. முத்துக்குமார்
பாலசுப்பிரமணியத்துக்கு அல்வா சாப்பிடும் பாடல். சும்மா ஹை பிட்சில் பின்னி எடுக்கிறார். ரஜினியின் அறிமுகப் பாடலாக இதுதான் இருக்க வேண்டும். ஷங்கரின் பிரம்மாண்ட்த்தை இப்போதே எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நா. முத்துக்குமாரின் வார்த்தை ஜாலம் கலக்க, சும்மா பீட்டுகளில் பெண்டு எடுத்திருக்கிறார் ரகுமான்! ரெஹானாவை இனிப் பாடாமல் அல்ல பேசாமல் கூட இருக்கச் சொல்வது நலம். இப்பவும் எப்பவும் பல்லேலக்கா!

மதிப்பு: 6

4. வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
பாடியவர்: ஹரிஹரன், மதுஸ்ரீ
பாடல்: வைரமுத்து
இதுவும் ஒரு மெல்லிய பீட்டுப் பாட்டு. ரகுமான் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் வயலின்களையும் டிரம்ஸையும் வைத்துப் பாட்டு முழுக்க வித்தை காட்டுகிறார். ஹரிஹரனைப் பற்றிப் புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. மதுஸ்ரீயின் உச்சரிப்பு நாளுக்கு நாள் மேற்படுவது குறித்து மகிழ்ச்சி!
ஆம்பல், மௌவல் – எனச் சங்க காலப் பூக்களை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்கிறார் வைரமுத்து. அத்தோடு “பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்” என்கிறார். அது ரஜினிக்கு மற்றவர்களிடம் இல்லையா என்ன?
மதிப்பு: 6

5. சஹானா சாரல்
பாடியவர்:உதித் நாராயண், சின்மயி
பாடல்: வைரமுத்து.
ஒரு பாட்டு நச்சக்கென்று மனதில் போய்த் தைப்பதற்கு பல்லவியின் மெட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்பாடலின் பல்லவி சும்மா ஒற்றைக் கம்பிப் பத்த்தில் வழியும் தேனைப் போல் இருக்கையில் நெஞ்சில் தங்க வலிக்கிறதா என்ன? நடுவில் வரும் ரகுமானின் ஜதி இன்னொரு சுகம். என் தினம் சில காலம் இப்பாடலில் துவங்கும். உதித்துக்குத் தமிழை “உதிர்த்த நாராயண்” என்று ஒரு பெரும் பெயர் உண்டு. அதைப் போக்க சின்மயியுடன் இணைந்து தவம் இயற்றி இருக்கிறார். ஓராயிரம் ஆண்டுகள் சேமித்து நூறாயிரம் ஆண்டுகள் வாழும் காதல் என வழக்கம் போல் உயர்வு நவிற்சியில் விளையாடி இருக்கிறார் வைரமுத்து. இத்திரையின் சிறந்த பாடல் இது!
மதிப்பு: 7

6. அதிரடிக் காலம்
பாடியவர்:ரகுமான், சயனோரா.
பாடல்: வாலி.
ஒரு ஹீரோயிசப் பாட்டுக்குத் தேவையான எல்லாமே குறைவரக் கிடைக்கும் பாடல் இது. பல்லேலக்காவும் இதுவும்தான் முதலில் இளசுகளின் நெஞ்சைத் தைக்கப் போகின்றன. ரகுமானுக்கு ஸ்பெஷாலிட்டியான ஹை பிட்ச் பாட்டு. ஆனாலும் எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே, அதான் பிரச்சினை!
“இவன் பில்லா ரங்கா பாட்ஷாதான்
இவன் பிஸ்டல் பேசும் பேஷாதான்” – வரிகள் சொல்லவில்லையா வாலியென்று?!
மதிப்பு: 6

6. ஒரு கூடை சன்லைட்
பாடியவர்:ராக்ஸ், தன்வி, பிளாஸி, சுரேஷ் பீட்டர்ஸ்.
பாடல்: பா. விஜய்.
பச்சைத் தமிழனும் வெள்ளைத் தமிழனும் கலந்து கட்டும் இந்தப் பாட்டு ரகுமானின் ஆரம்பகால இஸ்டைல்… இன்று கேட்கும் போது என்னமோ உறுத்துகிறது. சுரேஷ் பீட்டர்ஸ் எங்கே போனார் இத்தனை நாட்களாக? என் கணிப்பு சரியாக இருக்குமானால் ரஜினி ராம்ப் வாக் போகத்தான் இந்தப் பாட்டு சரிப்படும்!
வித்தக்க் கவிஞர் இப்போதெல்லாம் ஆங்கில வித்தைதான் காட்டுகிறார். இப்பாடலில் எத்தனை தமிழ் வார்த்தைகள் என்று சொல்வோருக்கு (நடிகர் திலகம்) சிவாஜி போட்ட கோட்டு பரிசு! முதல்ல வார்த்தைகள் எங்கே என்று லேட்டரலாக்க் கேள்வி கேட்பவருக்கு முதல் பரிசு!
மதிப்பு: 4

7. சஹாரா பூக்கள்
பாடியவர்:விஜய் ஜேசுதாஸ், கோமதிஸ்ரீ.
பாடல்: வைரமுத்து.
ஜம்முன்னு ஒரு பாட்டு ரகுமான் போட்டவுடன் ஷங்கருக்கு மனதில் மின்னலடித்து இன்னொரு வெர்ஷன் வாங்கி வைத்துவிட்டார்! இதற்கு முந்திய உதாரணம் – குறுக்குச் சிறுத்தவளே. எவ்வித்த்திலும் சோடை போகாத பாட்டு இது. விஜய் அருமையாகப் பாடி இருக்கிறார். முன்பெல்லாம் கல்யாணி மேன்ன் (குலுவாலிலே, அலைபாயுதே) பாடிக் கொண்டிருந்த பிட்டுகளை இப்போது புதிதாக கோமதிஸ்ரீ பாடுகிறார். நன்றாகவே இருக்கிறது.
மதிப்பு: 7

மொத்தம்: 53%

1 comment:

G.Ragavan said...

62 குடுத்திருக்கீங்க. கொஞ்சம் கூடன்னுதான் தோணுது. ஆனா படமாப் பாத்தப்புறந்தான் பாட்டுகள் ஒன்னொன்னும் எங்கெங்க போகுதுன்னு சொல்ல முடியும். ஆனா அந்த சஹாரா பூக்கள் பூத்ததோ அருமையோ அருமை. அதிலும் விஜய் யேசுதாஸ்...அடடா! மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் என்று கோமதிஸ்ரீ பாடுவதும் அருமை. இப்படியாவது தமிழ் இலக்கியங்கள் இசை வடிவம் பெறுவது மகிழ்ச்சியே.