Tuesday, April 10, 2007

பாட்டு எப்படி? - சென்னை 600028

கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசைக்க, ஒரு மாதிரி “குடும்ப்ப்” படம் இது. யுவன் சமீப காலமாகப் பட்டை கிளப்பும் வேகத்துக்கு இந்தப் படமும் ஒரு உந்தியாகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு புதிய சோதனையும் பாடல்களில் இல்லை. அதுவே ஒரு வெற்றியும் கூட!

1. நட்புக்குள்ளே

பாடியவர்:யுவன்
பாடல்: யுவன்???.
குட்டியாய் ஒரு பிட்டுப் பாட்டு. மெல்லிய மெலடி தாலாட்டுது. யுவனின் குரல் “பொய் சொல்ல” (ஏப்ரல் மாத்த்தில்) காலத்தில் இருந்து ஒரே மாதிரி இருக்குதே! நட்புப் பாட்டு -- காதல் பிரிவை விட நட்புப் பிரிவு வலி தரும் என்கிறது. இந்த்த் தளம் http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.9036/ இந்தப் பாட்டை எழுதியவர் யுவன் என்கிறது. என்னால் நம்ப முடியவில்லை.

மதிப்பு: 3

2. ஓ! ஓ! என்னென்னமோ

பாடியவர்:அனுஷ்கா
பாடல்: வாலி

அனுஷ்கா மீது அப்ப்டி என்ன நம்பிக்கையோ தெரியவில்லை. தீப்பிடித்த்துக்கு அப்புறம் பல தடவை யுவன் இசையில் பாடி விட்டார். உடம்பை “உடும்பாக்கி” இவர் படுத்தும் பாட்டில் தமிழன்னை டெல்லிக்கே ஓடுகிறாள். இதை எழுதுவதற்கு வாலி அவசியமா? ஆனால் பாட்டு மெட்டில் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. முக்கலும் முனகலும் இல்லாமல் இருந்தாலே இன்னும் சுகம் கூடியிருக்கும்.

மதிப்பு: 3

3. உன் பார்வை மேலே

பாடியவர்:விஜய் ஜேசுதாஸ்
பாடல்: வாலி
இதுவும் ஒரு மெலடியே. சின்னச் சின்ன பீட்டுகளுக்கு நடுநடுவே மேற்கத்திய இசை வடிவங்கள்! இது யுவனுக்குப் பழக்கமானதுதான். கேட்க்க் கேட்கப் பிடித்துப் போகும் மெட்டு இது. வாலியின் வரிகள் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை.

மதிப்பு: 5

4. வாழ்க்கையில் யோசிங்கடா (ஜல்ஸா)

பாடியவர்: ஹரிசரண், ரஞ்சித், கார்த்திக், பிரேம்ஜி, திப்பு
பாடல்: கங்கை அமரன்
ரொம்ப நாளைக்கப்புறம் கங்கை அமரன் மகன் பட்த்தில் பாட்டு எழுத வந்து விட்டார். கானா மெட்டில் தாளம் போட வைக்கும் மேற்கத்திய இசையை உள் நுழைக்கும் முயற்சி. பரவாயில்லை.

மதிப்பு: 4

5. வாழ்க்கையில் யோசிங்கடா (ஜல்ஸா)

பாடியவர்: ‘கானா’ பழனி, ‘கானா’ உலகநாதன், கருணாஸ், பிரேம்ஜி,சபேஷ்
பாடல்: கங்கை அமரன்

ஒரே மெட்டு என்பதால் மேற்கண்ட கருத்துகள் இதற்கும் செல்லுபடியாகும். ஆயின், சரியான கானா மெட்டு என்பதால் இதைப் பாடியவர்களுக்குச் சாலப் பொருத்தம்.

மதிப்பு: 4

6. வேர்ல்டு கப்பு ஜெயிக்க

பாடியவர்: யுவன், டி ஜே ஃபங்க்கி சத்யா
பாடல்: வாலி
நம்ம வேர்ல்டு கப்புக் கனவுகளே கானலாப் போனதுக்கப்புறம் சென்னை 28-ல் இருந்து கூட வேர்ல்டு கப்பு வெளையாடப் போகலாம். இந்தப் பாட்டில் இயல்பாகவே உள்ள துள்ளல் எல்லாரையும் தொற்றும். வாலியின் வரிகளில் வீடு தோறும் ச்ச்சின் திராவிட்டைத் தேடுகிறார்கள். யுவனுக்கு ஏற்ற பாடல் இது. ஆனால் ஏன் எப்போது பார்த்தாலும் யாரோ கத்தியால் குத்தியது போன்றே பாடுகிறார் என்றுதான் புரியவில்லை.

மதிப்பு: 5

7. யாரோ யாருக்குள் (நட்பு)

பாடியவர்: எஸ் பி சரண், வெங்கட் பிரபு
பாடல்: வாலி
ஹ்ம்ம்… ஒன்றுமே தேறாதோ என்ற வேளையில் வராது வந்த மாமணியாய் இந்தப் பாட்டு. நட்பின் பெருமையைப் பிற பாடல்கள் போலேதான் இதுவும் கையில் எடுத்திருக்கிறது. ஆனால் தாளம் போட வைக்கும் பின்னணி இசை யுவனின் இருப்பைக் கட்டியம் கூறுகிறது. சரணுக்கு சிறப்புப் பாராட்டுகள்.

மதிப்பு: 7

8. யாரோ யாருக்குள் (காதல்)

பாடியவர்: சித்ரா, எஸ் பி பாலசுப்பிரமணியம்
பாடல்: வாலி
அனேகமாகத் தமிழில் சித்ரா யுவனுக்குப் பாடிய முதல் பாடல் இதுதான். பாலசுப்பிரமணியத்துக்கும் சித்ராவுக்கும் அனுபவம் துணை கொடுக்கப் பின்னணியில் யுவனின் வயலின்கள் சிறக்க, வாலியின் வரிகள் காற்றில் கரையும் கற்பூரம் போல் இல்லை காதல் என்கின்றன. உண்மை! இந்தப் பாட்டும் அப்படித்தான். இது ஒரு இனிய அனுபவம்.

மதிப்பு: 7

மொத்தம்: 48%

No comments: