Friday, December 09, 2011

ரசித்ததில் ருசித்தவை - சின்ன சின்ன மழைத்துளி

ரொம்ப நாளாவே நமக்கு இந்த ரசிப்பு ருசிப்பு அரிப்பை எல்லாருக்கும் சொல்லணும்னு ஆசை.  பல காரணங்களால் தள்ளி போயிக்கிட்டே இருந்தது.  சரி இப்ப ஆபீஸில் கடுமையான வேலை இருக்கே (?!) அதனால் இதை தொடர இதை விட நல்ல வேளை எப்போ வரப்போகுது?

இந்தப் பதிவுகளில் நான் ரசித்த பாடல்களை அவை எனக்கு ருசித்த விதத்தை சொல்ல போறேன். பிடிச்சா படிங்க :)

இயல்பாகவே எனக்கு உயர்வு நவிற்சி ரொம்ப பிடிக்கிறதில்லை.  தீயை திண்பேன், தமிழை உருக்கி ஊத்தி இருக்கேன், வானத்துக்கும் பூமிக்கும் பூவாலே பாதை அமைப்பேன்  அப்படி இப்படின்னு எழுதுறவங்களை பாத்தாலே பத்திக்கிட்டு வரும்...  கவிதைக்கு பொய் அழகுதான். ஆனால் அது ஒரு அளவுக்கு உள்ளே இருக்கணும் இயல்புக்கும் ஒத்து வரணும் என்பது என் கருத்து.  ஆனால் இந்த பாடல் கவிதைக்கு பொய் அழகு அப்படிங்கரதை எனக்கு சுருக்குன்னு சொல்லிடுச்சு. 

மழையில் நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. நிலத்தடி நீர், பயிர் பச்சை விளையிறது இதெல்லாம் விட்டுட்டா கூட, சாயங்காலம் சூடா பஜ்ஜி இதம்மா போத்த்திக்கிட்டு தூங்குறது, லேட்டா ஆபீஸ் போனாலும் யாரும் எதுவும் கேக்காம இருக்குறது இதெல்லாம் மழையால் நன்மைகள்.

கெட்டதுன்னு பாத்தா செல்போனை பாதுகாக்குறது, சரியா நம்ம வெள்ளை பார்மல் பேண்டில் கார் ஓட்டும் கனவான்கள் கோலம் போடுறது,  அங்கே இங்கே நனைஞ்சு சளி (சனி?!) பிடிச்சு ... இதெல்லாம் சிக்கல்!

ஆனால் மழையில் மேலே சொன்ன நல்லதுக்கெல்லாம் மேலே சில கண்ணுக்குத் தெரியாத இட மச்சக்கார மச்சான்களுக்கு மட்டும் வாய்க்கும் அதிர்ஷ்டம் கீழே இருக்கும் பாட்டு போலே.  ஆனால் அதை நம்ம அரவிந்த சாமி மாதிரி வீணாக்கும் பய புள்ளைகளை பாருங்க. பின்னாடி மழைத்துளி மாதிரியே ஒரு பொம்பளை புள்ளை வருது அதை விட்டுட்டு... சரி சரி..

எல்லாத்துக்கும் மேலே இந்த பாட்டு, அதில் உள்ள துள்ளல், ஸ்ரீகுமாரின் மலையாளம் கலந்த குரல், வானம் அளவு உயர்வு நவிற்சி உள்ள வைரமுத்துவின் வரிகள் - எல்லாமே ஒரே இடத்தில் அமைவது அருமை.  பாட்டு ஆரம்பிக்கும் போது ஒரு துளி விழுது என்பது எனக்கு ஒரு துளி வானத்தையும் பூமியையும் இணைக்கும் விழுது அப்படின்னு எழுதி இருக்காரோன்னு  தோணுச்சு.  ஆனா அப்படி எல்லாம் இல்லை :)

மழைத் துளி ஒவ்வொரு இடத்திலும் விழுந்தால் அதன் உருமாற்றம் என்ன அப்படின்னு வரிசையா சொல்லி கடைசியா என் கண்ணீரண்டில் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய் அப்படின்னு முடிக்கிறார் பாருங்க. சூப்பர்.

இப்ப பாட்டை பாருங்க!

பாடல்: சின்ன சின்ன மழைத்துளி
படம்: என் சுவாசக் காற்றே
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: எம் ஜி ஸ்ரீகுமார்